Male
Poongatre poongatre
En kaadhal nenjin paadalaaga vaa vaa
Oru thoodhu sellum thozhiyaaga vaa
Alai modhudhae mana meedhilae
Pudhu aaasai vellangalae
Poongatre poongatre
Female
Kaalangal thorum paruvangal maarum
Kaadhalin thaagam moganum aagum
Andhi varum velaiyil
Indha malar solaiyil
Varum madhana urchavam
Male
Idhu poovaiyai thedidum pudhu uravu
Idhazh orathil oru ninaivu
Andha megangal kooduthu
Inaiyudhu thazhuvudhu thulludhu en manamae
Female
Poongatre poongatre
Male
Malaivaasi pennae ennaasai kannae
Manadhodu unnai anaippavan naanae
Nee vana mohini en mana mohini
Idhazh semmaangani haa aa aa aa aa
Female
Ila moongilgalin melliya kilaigalilae
Pani thuligalin azhaginilae
Vanna maamayil aadudhu poonguyil koovudhu
Mayangudhu en manamae
Female
En kaadhal nenjin paadalaaga vaa vaa
Male
Oru thoodhu sellum thozhiyaaga vaa
Female
Alai modhudhae mana meedhilae
Pudhu aaasai vellangalae
குழு
..........................
ஆண்
பூங்காற்றே பூங்காற்றே
என் காதல் நெஞ்சின் பாடலாக வா வா
ஒரு தூது செல்லும் தோழியாக வா
அலை மோதுதே மனமீதிலே
புது ஆசை வெள்ளங்களே....
பூங்காற்றே பூங்காற்றே
பெண்
காலங்கள் தோறும் பருவங்கள் மாறும்
காதலின் தாகம் மோகனம் ஆகும்
அந்தி வெறும் வேளையில் இந்த
மலர் சோலையில் வரும் மதனோற்சவம்
ஆண்
இது பூவையை தேடிடும் புது உறவு
இதழ் ஓரத்தில் ஒரு நினைவு
அந்த மேகங்கள் கூடுது இணையுது
தழுவுது துள்ளுது என் மனமே......
பெண்
பூங்காற்றே பூங்காற்றே
ஆண்
மலைவாசி பெண்ணே என்னாசை கண்ணே
மனதோடு உன்னை அணைப்பவன் நானே
நீ வன மோகினி என் மன மோகினி
இதழ் செம்மாங்கனி....ஆ....ஆ....ஆ....ஆ....
பெண்
இள மூங்கிலின் மெல்லிய கிளைகளிலே
பனித் துளிகளின் அழகினிலே
வண்ண மாமயில் ஆடுது பூங்குயில் கூவுது
மயங்குது என் மனமே........
ஆண்
பூங்காற்றே பூங்காற்றே
பெண்
என் காதல் நெஞ்சின் பாடலாக வா வா
ஆண்
ஒரு தூது செல்லும் தோழியாக வா
பெண்
அலை மோதுதே மனமீதிலே
புது ஆசை வெள்ளங்களே....
இருவர் : பூங்காற்றே பூங்காற்றே